Ticker

6/recent/ticker-posts

தனது பதவியை இராஜினாமா செய்த ஹிருனிகா பிரேமச்சந்திர

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் தெரிவித்துள்ளார்.


பதவியிலிருந்து விலகிய போதிலும், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும், தற்போது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது கட்சியின் அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்று கட்சியில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டினால் ஏற்பட்ட மன விரக்தியே தனது இராஜினாமாவிற்கு காரணம் என்று ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.



எனினும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஹிமுனிகா பிரேமச்சந்திர, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேர்தலில் மக்கள் தன்னை மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.








Post a Comment

0 Comments