Ticker

6/recent/ticker-posts

இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியானார் கையிஸ் சையத்.

டுனிஷியா ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


இதனையடுத்து, 02 வது முறையாக அவர் ஆட்சியை பொறுப்பேற்கவுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான டுனிஷியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தலில் வெறும் 28.8 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 90.69 சதவிகித வாக்குகளை கையிஸ் சையத் என்பவர் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments