Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அடையாளம் தெரியாத வைரஸால் ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பு

அநுராதபுரம் மத்திய நுவரகம் மாகாண பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோய் காரணமாக பன்றிகள் அதிகளவில் இறந்து போவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1000 பன்றிகள் கன்றுகளுடன் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த அடையாளம் தெரியாத வைரஸ் தொற்று ஏற்பட்ட 02 நாட்களில் பன்றிகளை கொன்று விடும் என்றும் கூறப்படுகின்றது.

இதுவரை 800 பன்றிகளுள்ள பண்ணைகளில் சுமார் 200 பன்றிகளும், 300 பன்றிகளுள்ள பண்ணைகளில் 50 முதல் 60 பன்றிகளும் இறந்துள்ளன. இறந்த கன்றுகளின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சுமார் 20 பன்றிப் பண்ணைகள் உள்ளதாகவும், இப்பண்ணைகள் அனைத்திலும் இவ்வாறு பன்றிகள் இறந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், அதற்கான தீர்வுகளை வழங்க கால்நடை வைத்தியர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பன்றிகள் அதிகளவில் உயிரிழப்பதால், சில பண்ணைகளில் சேதம் 01 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




Post a Comment

0 Comments