Ticker

6/recent/ticker-posts

சீசெல்ஸ் நாட்டின் புதிய சட்டமா அதிபராக இலங்கையர் நியமனம்.

சீ ஷெல்ஸ் நாட்டின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா (Vincent Perera) என்பவர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.


சீ ஷெல்ஸ் நாட்டின் அரச சபையில் நேற்று (16) வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக சீ ஷெல்ஸ் ஊடகங்களில் செய்தி வௌியாகியுள்ளன.

இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா (Vincent Perera) , கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

அத்தோடு, ( Vincent Perera)  மேலதிகமாக பிஜியில் சட்டத்தரணியாகவும், மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளதுடன், சிங்கப்பூரிலுள்ள மத்தியஸ்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தராகவும் இவர் தகுதி பெற்றுள்ளார்.

மேலும், வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) , சீ ஷெல்ஸின் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சீ ஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments