ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் (Litro Gas) விலையில் எவ்வித மாற்றமும் இல்லையென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ள போதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை அதிகரிப்பதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சன்ன குணவர்தன இன்று (01) அறிவித்தல் விடுத்துள்ளார்.
பங்கு செயற்பாடுகளை முறையாக நிர்வகிப்பதன் காரணமாகவே இவ்வாறான நிவாரணங்களை வழங்க முடியும் என்று லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments