Ticker

6/recent/ticker-posts

பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்.

பிரபல நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.


அவருக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை (04) சுமார் 09 மணி நேரம் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



சொகுசு கார் வாங்குவதற்கு பியூமி ஹன்சமாலி எப்படி பணம் சம்பாதித்தார் என்பது குறித்தும், அவர் விற்பனை செய்யும் அழகுசாதனப் பொருட்களூடாக அதிகளவு பணம் பெற்றது குறித்தும் விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



குறித்த விசாரணை தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக பியூமி ஹன்சமாலி நேற்று காலை 9.00 மணியளவில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments