Ticker

6/recent/ticker-posts

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், இன்று (14.10.2024) காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) விஷேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

எனினும், புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சை தொடர்பான விசாரணை

இந்நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்களை திருத்தும்  பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனியானதொரு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

மேலும், குறித்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாளானது, விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments