Ticker

6/recent/ticker-posts

விபத்தில் உயிரிழந்த மகனின் GCE (O/L) பெறுபேற்றை பார்த்து மரணித்த தந்தை.

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறந்த GCE (O/L) பெறுபேற்றைப் பார்த்து வேதனையடைந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த மாணவன் நீர்கொழும்பிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன் GCE (O/L) பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், பரீட்சைகள் முடிவடைந்து 02 நாட்களின் பின்னர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர்  28 ஆம் திகதி வெளியான GCE (O/L) பரீட்சை பெறுபேறுகளின் படி குறித்த மாணவன் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். இதனையடுத்து மகனின் பெறுபேறுகளை அறிந்து வேதனையடைந்த  தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்,  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தந்தை 53 வயதுடையவர் என்பதோடு,  03 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உயிரிழந்த தந்தையின் மகன் மே மாதம் இரவு, கட்டான, இட்டகொடெல்ல வீதியில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக் ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த வேளையில் கார் ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் GCE (O/L) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான பின்னர் மகனுக்கு அதிசிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளதை அறிந்த தந்தை தனது மகன் உயிருடன் இல்லை என்பதை நினைத்து மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கவலையுற்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments