மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 03 புதிய நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுடைய முன்னிலையில் இன்று (11) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதற்கமைவாக, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ.கே.எஸ்.யு. பிரேமசந்திர, கே.பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ.பிரேமசங்கர் ஆகியோரே மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments