இலங்கையில் குரங்குகளால் 100 மில்லியன் தேங்காய்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் மந்திகள், குரங்குகள், மர அணில்கள், மற்றும் மயில்கள் ஆகிய விலங்குகளால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதன் காரணமாக இம்மாதம் 15 ஆம் திகதி விலங்குகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
விலங்கு கணக்கெடுப்பிற்காக செலவு செய்துள்ள தொகை குறைவானது எனவும் ,சேவை வழங்கும் அதிகாரிகள் சுயேட்சையாக முன் வந்துள்ளதாகவும் விவசாய, கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பீ. விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
"விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்த போதிலும் அதற்காக இதுவரையில் முறையான மதிப்பீடுகள் மேற்கொள்ளாமையை அடிப்படையாகக் கொண்டு குறித்த யோசனை முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்."
இந்த கணக்கெடுப்பு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கான தீர்வாக அமையாது என்று தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி என்பவர் தெரிவித்துள்ளார்.
குரங்குகள் உட்பட பல்வேறு விலங்குகளால் கடந்த ஆணண்டில் எதிர்பார்த்த தேங்காய் அறுவடையில் 100 மில்லியன் தேங்காய்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments