அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்று (13) ஆரம்பிக்கப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்பு இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை (13) காலை 8.00 AM மணியுடன் நிறைவடைந்தது.
0 Comments