முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் வரலாறு காணாத அபிவிருத்தி கண்டதை யாருமே மறுக்க முடியாது. இப்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைப்பட்டுள்ளன.
விஷேடமாக திருகோணமலை மாவட்டத்துக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் செய்துள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கட்சியின் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற குறித்த தேர்தல் பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் இப்ராஹிம் சதாத் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (17) கிண்ணியா பிரதேச சபை கேட்போர் கூடத்தில், இக்கூட்டம் நடைபெற்றது.
பா. உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எமது எதிர்கால ஆட்சியில், இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்கு நாம் முன்னுரிமை வழங்குவோம். திருகோணமலை மாவட்டம் அதி உச்ச அபிவிருத்திகளை மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்திலேயே அடைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
கிராமங்களை அபிவிருத்தி செய்கின்ற ஒரு தேர்தலை நாங்கள் எதிர்நோக்கியிருக்கின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், திறமையான, நேர்மையான இளைஞர் மற்றூ யுவதிகளை களம் இறக்கியுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments